search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே பாதை"

    • ரெயில்வே பாதை அடைக்கப்பட்டதால் வழித்தடம் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம்.
    • இந்த நகருக்குள் 60க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மேற்கு வஞ்சிப்பாளையம் சென்னிமலை கவுண்டர் நகருக்கு செல்லும் ரெயில்வே பாதை அைடக்கப்பட்டுள்ளது. இந்த நகருக்குள் 60க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக போக்குவரத்து சாலையாக ரெயில்வே பாதையை பயன்படுத்தி வந்தோம். சாலையை விரிவுப்படுத்துவதற்காக தற்போது ரெயில்வே பாதை அடைக்கப்பட்டதால் வழித்தடம் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம். எனவே வழித்தடம் அமைத்து தர வேண்டும் என கூறியுள்ளனர். 

    • மேம்பாலம் அருகில் ரெயில்வே பாதையில் முதியவரின் பிணம் கிடந்தது.
    • தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் ரெயில்வே மேம்பாலம் அருகில் ரெயில்வே பாதையில் முதியவரின் பிணம் கிடந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் இது குறித்து திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த தகவலின்படி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தவருக்கு சுமார் 60 வயது இருக்குமென போலீசார் தெரிவித்தனர்.

    மேலும், இறந்து கிடந்தவரின் சட்டை பையில் இருந்த ஆதார் கார்டில் சிவாஜி, மன்னார்சாமி தெரு, வசந்தபுரம், திண்டிவனம் என்று உள்ளதாக ரெயில்வே போலீசார் கூறினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், இறந்து போனவர் மேற்கண்ட விலாசத்தை சேர்ந்தவரா, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு ரெயில்வே பாதையில் வீசப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×